மனிதன் வாழ 16 பேறுகள் தேவை

கலையாத கல்வியும் குறையாத வயதும் கபடுவராத நட்பும் குன்றாத இளமையும்,  குன்றாத வளமையும் , கழுபினி இல்லாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாளாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும் தடைகள் வராத கொடையும், தொலையாத நிதியும், கோணதா கோலும், தூய நின் பாதத்தில் அன்பும் உதவியும் பெரியாரோடு கூட்டும் கண்டாய் அலையாழி அரிதுயிலும் மாயலது தங்கையே - ஆதி கடவூ ரின் வாழ்வே அமுதீசா ஒரு பாகம் அகலாத சுகபானி அருள்வாய் நீ அபிராமியே.


இதே போல்  ஒரு செடி நன்கு வளர 16 க்கும் மேற்பட்ட சத்துக்கள் தேவை. இச் சத்துக்கள் குறைவானால் 1/2 கிராம் அதற்கான உரத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து செடிகள் மேல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க நிவர்த்தியாகும் .


பூச்சிநோய் தாக்குதல் இயற்கை முறை மருந்து


1). அதிகமாக ஈரம் இல்லாதவாறு பார்த்து நீர் தெளிக்க வேண்டும். அப்போது நோய்கள் வர வாய்ப்பில்லை.


2). மாடிக்கேற்ற மண்கலவையுடன் சூடோமோனஸ் புனோரோசன்ஸ் பாக்டீரியாகலவை  சேர்க்கலாம்.


3). 2 கிலோ  வேப்ப இலையை 2 லிட்டர்  நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்த சாறில் 100 கிராம் புகையிலைச்சாறும் கலந்து தெளித்து வந்தால் பூச்சி வராது.


4). வேப்ப இலை 1/2 கிலோ , நொச்சிஇலை 1/2 கிலோ , ஆடாதொடா இலை 1/2 கிலோ , பச்சை மிளகாய் 1/2 கிலோ கலந்து 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து  ஆறவைத்த சாறை 3 மடங்கு தண்ணீர் கலந்து தெளித்து வர பூச்சி அணுகாது .        



கெமிக்கல் முறையில் மருந்துகள்

1). வேரமுகல் நோய் , இலைபுள்ளி நோய் தென்பட்டால் கார்பென்டிசம் 50WP  அல்லது மேன்கோசப் -45 WP  2 கிராம் / 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.


2). புழுக்கள் அதிகமாக இருந்தால் குயினால் பாஸ் -25EC  மருந்தை உமில்லி /1 லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிக்கவும்.


3). வெள்ளை நிற மாவுப்பூச்சி தென்பட்டால் டைமீத்தாயேட்-30EC , இமிடா குளோப்ரைடு 17% SL  மருந்தை உமில்லி /1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.


4). எறும்பு , கரையானுக்கு குளோர்பைரிபாஸ் 20EC- மருந்தை  மில்லி /1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.


5). கொசுவுக்கு லேம்டா சைக்லோத்ரின் 5EC-மருந்தை  மில்லி /1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.


6). பச்சை பாம்புகள் அதிகம் தென்பட்டால் புரோப்பனாபாஸ்-50EC  2 மில்லி /1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.


7). வீடுகளை சுற்றி பாம்புகள், தவளைகள் தென்பட்டால்  போரேட் 3% G  குருனை மருந்தை சுற்றி போட்டு விடவும். அல்லது சிறிது கற்பூரம் , வெற்றிலைச்சாறு , பூலங்குகிழங்கு , வெள்ளப்பூடு , கத்தரி , இஞ்சி, பச்சை மிளகாய் இடித்து சாறு பிழிந்து வீட்டை சுற்றி தெளித்து வந்தால் பாம்பு மற்ற விஷ பூச்சிகள் வராது.


8). எலிகளுக்கு ஜிங்பாஸ்பைடு மருந்தை 1 கிராமை 10 மில்லி தேங்காய் எண்ணெய்யையும், 100 கிராம் பொரியுடன் கலந்து எலிவரும் இடங்களில் வைக்கவும். அல்லது எலி கேக்  வைக்கலாம்.



கழிவுப்பொருளை உரமாக்குதல்

தங்கள் வீட்டருகே கிடைக்கும் இலைதழை , காய்ந்த செடிகளை ஓரிடத்தில் பரப்பிவைத்து அதன்மேல் சானம் கலந்த நீரை வாரம் 1 முறை தெளித்து மேலாக தார்பாய் இட்டோ , மண்இட்டோ மூடி வந்தால்  60 நாட்களில் நன்கு மட்கிய உரமாகிவிடும்  இதை செடிகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் மண்புழு உரம் தயாரித்தல் , ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல், பஞ்சகாவ்யா தயாரித்தல், காளான் வளர்த்த வேஸ்ட் வைக்கோலை  உரமாக்குதல் முதலிய அனைத்து முறைகளையும் செய்து தாவர   கழிவுப்பொருட்களை  உரமாக்குவோம்.இத்தகைய உரங்க்களிட்டு வளர்க்கும் போது, நஞ்சற்ற காய்கறிகள் விளையும்.


மாடித்தோட்டத்திற்கான திட்டமிடல் , செயல்பாடும் 

மாடியின் அளவுகளைப் பொருத்து , அதன் அஸ்திவார உறுதித்தன்மைகளை பொருத்து நாம் விரும்பிய செடிகளை எப்பகுதியில் வளர்க்கலாம், என்பதை பொருத்து , நடைபாதைகள் எப்பகுதியில் ஒதுக்கலாம் என்பதை பொருத்து ஒரு பேப்பரில் வரைந்து முன்னமே திட்டமிட வேண்டும். திட்டமிடல் என்பது மிக முக்கியமானது . பைபிளில் கடவுள் மனிதனை படைக்கும் முன்னதாகவே

முதல்நாள்                               - பகல்,இரவை படைக்கிறார் .

இரண்டாம்நாள்                       - கடலையும்,தரையையும் உண்டாக்குகிறார்.

மூன்றாம் நாள்                          - புல்பூண்டுகளை , செடிகளை, நிலம்                         
                                                             விளைவிக்கச் செய்கிறார்.


நான்காம் நாள்                             - சூரிய, சந்திரனை படைக்கிறார்.


ஐந்தாம் நாள்                                  - கடல்வாழ்உயரினங்கள், பறவைகள்     
                                                                 விலங்குகளை  படைக்கிறார்.


ஆறாம் நாள்                                    -   மனிதனை படைக்கிறார்.


இவ்வாறு மனிதனுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்திய பின்னரே மனிதனை உருவாக்குகிறார். எனவே நாமும் மாடித்தோட்டம் அமைக்கும் முன் பலவற்றை குறித்து தெளிவாக ஆராய்ந்து அமைத்து விடுவது மிக நல்லது. அதுமட்டுமல்ல புதிய சிந்தனைகளோடு, வித்தியாசமான முறையில் மாடித்தோட்டத்திற்கான புதிய தகவமைப்புகளை உருவாக்கலாம்.

முயற்சிகள் தவறலாம் . ஆனால்   முயற்சிக்க தவறலாமா?