நீர்பாசன முறைகள்

1). சிறிய வகை தாவரச்செடிகளுக்கு காலை மாலை கொடுக்கப்பட்ட மண்உர கலவை முழுவதும் நனையும் படி வெயில்காலங்களில், காலை, மாலை இருநேரமும் நீர் தெளிப்பது நல்லது.


2). செடிகள் வளர்ந்தபின் நல்ல நீராக இருந்தால் செடிகள் மேல்படுமாறு தெளிக்கலாம். சற்றே உப்பு நீராக தென்பட்டால் செடிகள் மேல் படாமல் மண் கலவையில் தெளிப்பது அல்லது ஊற்றுவது நலம்.


3). மணி நேரத்திற்கு  மேல் தேங்கி நிற்கக்கூடாது. தேங்கி  நின்றால் துவாரங்கள் அடைக்கப்பட்டிருந்தால் சரி செய்ய வேண்டும்.



4). செடியை சுற்றி மண்கலவையில் குழிகள் உண்டாக்காதவாறு தண்ணீர் ஊற்ற வேண்டும் .



5). கிழங்குவகை பயிர்களுக்கு  மண்கலவையில் அதிக ஈரம் இல்லாதவாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றுவது நல்லது.


 6). சொட்டு  நீர்பாசன முறை  ஏற்படுத்தி பராமரிப்பது நல்லது. கீரை பாத்திகளுக்கு தெளிப்பு நீர் பாசனம் அமைப்பது நல்லது .


7). நீரின் மூலமாகவும் செடிக்கு வேண்டிய உரச் சத்துக்களை கொடுக்கலாம்.


8). வெளியூர் செல்வதாக இருந்தால் 5 லிட்டர் அளவுள்ள அல்லது தேவைக்கு தக்க பாட்டிலில் துளையிட்டு நூல் நாடாவை சொருகி தண்ணீர் நிரப்பி செடிகள் அருகே வைத்துவிட்டு சென்றால் நீண்ட நாட்களுக்கு அந்த அமைப்பு வழங்கும்  சொட்டுத் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.


களை கட்டுப்பாடு

1). நாம் வளர்க்க விரும்பும் செடியை தவிர மற்ற எந்த செடியானாலும் அது களையாகும். அவற்றை வேருடன் பிடுங்கி அந்த பையிலே போட்டு விடலாம்.


2). நாம் வளர்க்க விரும்பும் செடியும் ஒன்றுக்கு மேல் ஒருபையில், தொட்டியில் வளர்ந்திருந்தால் அதுவும் களையாகும். அதை வேறுபைக்கு வேருடன் பிடுங்கி நடவு செய்யவும் அல்லது அப்புறப்படுத்தவும்.


3).நாம் வளர்க்க விரும்பும் செடியில் உதாரணமாக நாம் விரும்பி வளர்க்கும் தக்காளிச்செடியின் அருகே ஆப்பிள் செடி முளைத்தாலும் களை தான் . அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.


மாடிக்கேற்ற மண்கலவையில் செடிகள் நன்கு வளர்ந்து வரும் சமயம் மாதம் ஒருமுறை உரமிடுதல் அவசியம். அவை செயற்கை உரங்களினால் 200 கிலோ மண்கலவை அமைப்புக்கு 50 கிராம் யூரியா 100 கிராம் சுப்பர் பாஸ்பேட் 50 கிராம் பொட்டாஷ் ஆகியன கலந்து ஒரு கிலோ  மண்கலவை  அமைப்புக்கு ஒரு கிராம் உரத்தை செடியின் வேர் அருகே இடாது சற்று தள்ளி பையின் விளிம்பில் அல்லது தொட்டியின் விளிம்பில்இடலாம் .


மாறாக இயற்கை உரம் இடவேண்டுமென்றால் 200 கிராம் வேப்பம் பின்னா க்குடன் 200 கிராம் மண்புழு உரம் அல்லது 200 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது 200 கிராம் ரைசோபியம் அல்லது 200 கிராம் அசட்டோபாக்டர் (அல்லது ) சூடோமோனஸ் புளோராசன்ஸ் மற்றும் 200 கிராம் பாஸ்போபாக்டீ ரியா , மற்றும் 200 கிராம் சாம்பல் அல்லது 200 கிராம் மைக்கோரைசா கலந்து ஒருகிலோ மண்கலவைக்கு 4 கிராம் வீதம் செடிகளின் வேர் அருகேயுள்ள மண்ணை கிளறி உரமிடவும்.


மாதம் தோறும் இட்டுவர செடிகள் சிறந்த முறையில் செழித்து வளரும். அல்லது நீரின் மூலமும் உரமிடலாம். 19:19:19 NP K , 17:17:17 NPK  உள்ள காம்ளக்ஸ் உரத்தை 1 கிராம் /1 லிட்டர் நீரில் கரைத்து செடிகள் இலைகள் மேல் சிறிய ஸ்பிரேயர் உபயோகித்து தெளிக்கலாம். அல்லது இயற்கை டானிக்காக , வெர்மிவாஷ் , மீன் அமினோ அமிலம் , பஞ்சகாவ்யாவை  நீரில் கலந்து இலைகள் மேல் தெளித்து வர நல்ல பலன் ஏற்படும் .


ஊட்டசத்து பற்றாக்குறை அறிகுறிகள்

1). நைட்ரஜன் -முதிர்ந்த இலைகள் மஞ்சளாக ( தழைச்சத்து) காணப்படும் .


2).பாஸ்பரஸ் -முதிர்ந்த இலை முழுவதும் (மனிச்சத்து) அல்லது ஓரங்கள்    .
                                கத்தரிப்பூ நிறத்தில்  காணப்படும்

3). பொட்டரஸ்- முதிர்ந்த இலையின் ஓரங்கள் (சாம்பல் சத்து ) காய்ந்து 
                                   காணப்படும்.

4). கால்சியம்   - இளம் நுனி இலைகள் விரியாது காயும்.


5). மக்னீசியம்  - முதிர்ந்த இலைகள்  வெளிர் மஞ்சள் நிறத்தில் சிகப்பு
                                    புள்ளிகளுடன்   காணப்படும்.

6). கந்தகம்          - இளம் நுனியிலை மட்டும் மஞ்சளாகி , உள்நோக்கி  வளைந்து                                     பழுப்பு நிற   புள்ளிகளுடன்   காணப்படும்.


7). இரும்பு           - இளம் நுனி இலைகளில் நரம்புகள் பச்சை நிறத்துடனும் ,
                                    நரம்பிடையே உள்ள பகுதி வெளுத்தும் காணப்படும்.

8). மாங்கனீஸ்    -  இளம் இலைகளில் நரம்பிடையே உள்ள பகுதி சாம்பல் 
                                      நிற,வெண்மையான புள்ளி அல்லது கோடுகள் தோன்றும் .

9). துத்தநாகம்        - நுனி  இலைகள் சிறுத்து  கொத்தாக காணப்படும், வெளுத்து
                                         காணப்படும்.

10). தாமிரம்            - இளம் இலை கரும்பச்சையாக சுருண்டும், இலை நுனிகள்
                                      மட்டும் வெள்ளை நிறத்தில் நுனி ஓரங்கள் சாய்ந்து காணப்படும்.

11). போரான்           -  இளம் இலை  நுனி இலை சுருங்கி , உடைந்து காணப்படும்.


12). மாலிப்டினம்     - இளம்  இலைகள் இலைபரப்பு குறுகி வால் போல் நீண்டு ,
                                          இலை மேற்பரப்பில் மஞ்சள் கோடுகள் காணப்படும்.

13) . சிலிகான்             - நெல் மற்றும் கரும்பு பயிர் நேராக நிற்க அதிகம்
                                              தேவைப்படுகிறது .

14). கார்பன்,ஹைட்ரஜன், ஆக்சிஜன்- காற்றிலிருந்து கிடைக்கும் ஒளிச் சேர்க்கை  செய்து தாவரங்கள் உணவு தயாரிக்க தேவைப்படுகிறது.