மாடிக்கேற்ற மண்கலவை

ஒருபங்கு செம்மண் , ஒருபங்கு ஆற்றுமணல் ,ஒருபங்கு நன்கு மட்கிய எரு அல்லது  இலைமடகு அல்லது  மண்புழுஉரம் அல்லது  ஊட்டமேற்றிய தொழுஉரம்.


அத்துடன் எடையை குறைக்கவும் , ஊற்றும் தண்ணீரை தக்கவைத்துக் கொள்ளவும் ஒருபங்கு தென்னை நார் கழிவுகள் , அல்லது மட்கிய சாம்பல் , தவிடு , மரத்தூள் ஆகிய மேற்கூறப்பட்ட நான்கு பங்கும் கலந்த கலவை அவசியம்.  இத்துடன் மேற்கண்ட கலவை சுமார் 200 கிலோவிற்கு இயற்கை உயிர் உரங்களான  200 கிராம் அசோஸ்பைரில்லம், அசட்டோ பாக்டர் அல்லது ரைசோபியம் , 200 கிராம் பாஸ்போ பாக்டீரிய, 200 கிராம் மைக்கோரைகா ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது 200 கிராம் வேப்பம்பின்னாக்கு, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் , 50 கிராம் பொட்டாஸ் கலந்து கொள்ளவும்.


மேற்கண்டபடி தயாரிக்கப்பட்ட கலவையுடன்  மாடியில்  செடிகள், வளர்க்க சில குறிப்பிட்ட கொள்ளளவுள்ள பைகள் , சாக்குகள் , ட்ரம்கள், தொட்டிகள், கான்கிரீட் அமைப்புகள் தேவை , அவற்றை இனி காண்போம் .